Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசிக் நோட்டு அச்சடிகத்தில் திருட்டு: எத்தனை லட்சம் மாயம்?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (07:59 IST)
நாசிக் நோட்டு அச்சகத்தில் 5 லட்ச ரூபாய் மாயமானதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற இடத்தில் நோட்டு அச்சகம் உள்ளது. இங்கு இந்திய கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் ஜூலை 12 வரையிலான காலகட்டத்தில் ஐந்து லட்ச ரூபாய் இந்த அச்சகத்தில் இருந்து மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் என முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது 
 
இது குறித்து அச்சக பாதுகாப்பு நிறுவன மேலாளர் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நாசிக் நகரத்தில் பல அடுக்கு பாதுகாப்பு இருப்பதால் அங்கு வெளியில் இருந்து வந்து திருட ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்றும் அதனால் அச்சகத்தில் உள்ள ஊழியர்கள் தான் திருடி இருப்பார்கள் என்றும் எனவே அச்சகத்தில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாசிக் நகரில் ஐந்து லட்ச ரூபாய் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments