தலைவா விமர்சனம் - Time To Think
, புதன், 21 ஆகஸ்ட் 2013 (08:32 IST)
சிங்கம், துப்பாக்கி, தலைவா போன்ற படங்கள் கேளிக்கையை பிரதானமாகக் கொண்டு எடுக்கப்படுபவை. அவை சுவாரஸியத்தை தருகிறதா என்பது முக்கியம். லாஜிக், சமூக அக்கறை எல்லாம் இரண்டாம்பட்சம்தான். சுவாரஸியத்தில் அவை கோட்டை விடும்போது மட்டுமே லாஜிக் இன்னபிற குறைகளைப் பற்றி பேச ஆரம்பிக்கிறோம். அல்லது குறைகள் மலியும் போது சுவாரஸியம் இல்லாமலாகிறது. அந்தவகையில் சின்னச்சின்ன குறைகளைத் தாண்டி சுவாரஸியத்தை தந்த பொழுதுப்போக்கு படம் துப்பாக்கி. சரி, தலைவா எந்த மாதிரி...?
படத்தின் கதை இதுதான். மும்பை சேரிவாழ் மக்களின் தலைவராக இருக்கும் சத்யராஜ் எதிரிகளால் கொல்லப்படுகிறார். அவரது மறைவுக்குப் பிறகு அப்பாவின் பொறுப்பை மகன் (விஜய்) ஏற்றுக் கொள்வதோடு அப்பாவை கொன்றவர்களை பழிவாங்குகிறார்.பல படங்களில் நாம் பார்த்த கதை. அப்படி இருப்பதில் தவறில்லை. கதை எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதுதான் பிரதானம். தலைவாவை பொறுத்தவரை நடுநிலையான சினிமா ரசிகன் படத்தை ரசிப்பதற்கு இடைஞ்சலாக பல விஷயங்கள் உள்ளன. நாம் பார்த்த பல படங்களின் காட்சிகள் அப்படியே தலைவாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக ராம்கோபால் வர்மாவின் சர்க்கார்.
மும்பையின் டானாக இருக்கும் அமிதாப்பச்சனிடம், தனது மகளை ஒருவன் சீரழித்துவிட்டதாக நடுத்தர வயது மனிதன் கதறுவதிலிருந்து சர்க்கார் படம் ஆரம்பிக்கும். அடுத்தக் காட்சியில் அமிதாப்பின் ஆட்களால் அந்த இளைஞன் சாகடிக்கப்படுவான். அதன் பிறகு கடத்தல் தொழில் செய்யும் தொழிலதிபர் அமிதாப்பின் ஆதரவை தேடி அவரது வீட்டிற்கு வந்து பேரம் பேசுவான். அமிதாப் அவனுக்கு உதவுவதற்கு மறுப்பார். இருவருக்குள்ளும் பகை முற்றும். இந்த பகைதான் படத்தை இறுதிவரை நகர்த்தி செல்லும்.அமிதாப்பின் மகன் அபிஷேக் வெளிநாட்டிலிருந்து தனது காதலி மற்றும் காதலியின் தந்தையுடன் மும்பை வருவதும், அமிதாப்பின் பின்னணியை பார்த்து அதிரும் அவர்கள் அபிஷேக்கை மறுதலித்து வெளிநாடு திரும்பி செல்வதும் படத்தின் நடுவில் வரும். அமிதாப் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அபிஷேக்கை எதிரிகள் கொலை செய்ய துரத்த, படகுகளுக்கு நடுவில் மறைந்து தப்பிப்பார். அந்த கொலை முயற்சியே அவர் அப்பாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள காரணமாக அமையும்.சர்க்கார் படத்தின் இந்தக் காட்சிகள் அனைத்தும் அப்படியே தலைவாவில் வருகிறது. மாடிமேல் நின்றிருக்கும் அமிதாப் கீழே நிற்கும் மக்கள் கூட்டத்தை நோக்கி கையசைப்பதும், அபிஷேக்கின் கையை உயரத்துக்கிக் காட்டுவதும்கூட தலைவாவில் இருக்கிறது. விஜய்யின் காதலி ஒரு போலீஸ் அதிகாரி, அவரை மும்பை வரவழைக்கவே காதலிப்பதாக நாடகமாடினார் என்ற ட்விஸ்ட் மட்டுமே விதிவிலக்கு. சர்க்காரில் உயிரோட்டமாக இடம்பெற்ற காட்சிகளை உயிர்ப்பே இல்லாமல் திரும்பப் பார்க்கையில் ஆயாசமாகிவிடுகிறது.விஜய் டானாக மாறுவதும், மக்களிடையே தலைவராக நிலைபெறுவதும்தான் இந்தப் படத்தின் பிரதான பகுதி. பாதி
படத்தை கதைக்கு சம்பந்தமில்லாத ஆஸ்திரேலியா காட்சிகளில் (ஆனால் இந்தப் பகுதிதான் படத்தில் ஓரளவு சுவாரஸியமானவை) கரைத்துவிட்டதால் இந்த பிரதான பகுதியை கோர்வையில்லாத துண்டு துண்டு காட்சிகளால் நிறைத்திருக்கிறார்கள். எப்படி...?