ஐந்து லட்சம் கொடுத்து சிங்கத்தை திரையிட்ட திரையரங்கு உ ரிமையாளருக்கு சிங்கம் பதினைந்து லட்சம் வசூலித்து தந்தது. லாபம் பத்து லட்சம். அதே திரையரங்கில் எந்திரனின் வசூல் இருபத்தைந்து லட்சம். ஆனால் எந்திரனுக்கு இருபது லட்சம் தந்ததால் திரையரங்கு உ ரிமையாளருக்கு லாபம் ஐந்து லட்சங்கள் மட்டுமே.
ஓகே, விஷயத்துக்கு வருவோம். சிங்கத்தின் வெற்றி ஹ ரியையும், சூர்யாவையும் மீண்டும் இணைய வைத்தது. சிங்கம் 2 வுக்குதான் ஹ ர ி அதிக நாட்கள் எடுத்துக் கொண்டார். கதை விவாதத்துக்கும், காட்சிகளை படமாக்கவும். சிங்கத்தில் நடித்த அனைவரும் - பிரகாஷ்ராஜ் முதல் பாகத்தில் கொல்லப்பட்டதால் அவர் மட்டும் இல்லை - சிங்கம் 2-வில் நடித்திருக்கிறார்கள்.
கூடுதலாக ஹன்சிகா, சந்தானம், ப ி ரிட்டீஷ் நடிகர் டேனி சபானி. அவர்களுடன் நாசர், ராதாரவி, ரகுமான், மன்சூர் அலிகான் ஆகியோரும் இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனோரமாவும் தலைகாட்டியிருக்கிறார். ஒரு குத்துப் பாடலில் அஞ்சலி.
பாடல் காட்சிகளுக்குகூட வெளிநாடு செல்ல தயங்கும் ஹ ர ி இந்தப் படத்துக்காக கென்யா, துபாய், டர்பன், கேப் டவுன் என பல இடங்களில் வசனக் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் படமாக்கியிருக்கிறார். சிங்கம் 2-வுக்கு சர்வதேச பிளேவர் ஏற்றுவதற்காக இந்த முயற்சி. சூர்யாவும் சர்வதேச தீவிரவாதிகளைதான் இதில் வேட்டையாடுகிறாராம்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஹ ரியின் ஆஸ்தான கேமராமேன் ப ் ரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேந்தர் மூவிஸ் 600 திரையரங்குகளில் படத்தை - தமிழகத்தில் - வெளியிடுகிறது.
கேரளாவில் சிங்கம் 2 என்ற பெயரிலும், ஆந்திராவில் யமுடு 2 என்ற பெயரில் தெலுங்கிலும் படம் வெளியாகிறது. இந்த மாநிலங்களையும், வெளிநாடுகளையும் சேர்த்து மொத்தம் 2,400 திரையரங்குகளில் சிங்கம் கர்ஜிக்க இருப்பதாக தகவல்.
ஜ ூலை ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கும் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் தந்துள்ளது.