Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 2197 கோடி நஷ்டம்; உபெர் ஈட்ஸ் ஸொமாட்டோவுக்கு கைமாறியது எப்படி?

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (11:41 IST)
உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் முழுவதையும் ஸொமாட்டோ நிறுவனம் கைப்பற்றியுள்ளதன் பின்னணி என்ன என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் ஆன்லைன் உணவு விநியோக தொழிலில் ஸொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு விநியோகத்தில் கால்பதித்த உபர் ஈட்ஸ் நிறுவனம் 41 நகரங்களில் சுமார் 26,000 உணவகங்களைக் கைவசம் வைத்திருந்தது.
 
ஆனால் போட்டியை சமாளிக்க முடியாத உபெர் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஸொமாட்டோவுடன் விற்பனைப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருந்தது. இந்த பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வந்து உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் முழுவதையும் சொமாட்டோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. உபெர் ஈட்ஸ் சோமேட்டோ ஒப்பந்தத்தின் மதிப்பானது 300 - 350 மில்லியன் டாலர் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த கடைசி 5 மாதங்களில் மட்டும் ரூ. 2197 கோடி அளவுக்கு உபெர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள தனது வர்த்தகத்தை ஸொமாட்டோவிடம் விற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments