Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றைய சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

இன்றைய சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது
, செவ்வாய், 29 டிசம்பர் 2015 (18:48 IST)
நேற்று போலவே இந்திய பங்கு சந்தைகள் இன்றும் உயர்வுடன் முடிந்தன. 


 
இன்று தொடக்கத்திலேயே இந்திய பங்குச் சந்தை  உயர்வுடன் தொடங்கியது. நிறைய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதாலும், ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதாலும், முக்கிய பங்குகள் ஏற்றம் கண்டதாலும், இன்றைய வர்த்தகம் நாள் முழுவதும் உயர்வுடனேயே முடிந்தது.
 
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45.35 புள்ளிகள் உயர்ந்து 26,079.48 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 3.80 புள்ளிகள் உயர்ந்து 7,928.95ஆகவும் முடிந்தன. 
 
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 11 நிறுவன பங்குகள் சரிந்தும் நிறைவு பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil