Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாள் படுவீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை மீண்டும் உயர்வு..! இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
வெள்ளி, 19 ஜனவரி 2024 (09:50 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களில் படுவீழ்ச்சி அடைந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேற்று முன்தினம் 1600 புள்ளிகளும் நேற்று சுமார் 300 புள்ளிகளும் என இரண்டு நாட்களில் சுமார் 2000 புள்ளிகள் பங்குச்சந்தை சரிந்தது.
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஓரளவு ஏற்றம் கண்டு இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்ந்து 71788 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 173 புள்ளிகள் உயர்ந்து 21,635 என்ற புள்ளிகளை வர்த்தகமாகி வருகிறது. இரண்டு நாள் பங்குச்சந்தை படு வீழ்ச்சி அடைந்தாலும் இன்று சுமார் 600 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. 
 
இனிவரும் நாட்களிலும் பங்கு சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

973 வாகனங்கள் ஏலம்.. முழு தகவல்களை வெளியிட்ட சென்னை காவல்துறை..!

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments