பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. தொடர் ஏற்றத்தால் முதலீட்டாளர்களுக்கு குவியும் லாபம்..!

Siva
வியாழன், 26 செப்டம்பர் 2024 (11:19 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து 85,014 என்ற புள்ளியில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை 68 புள்ளிகள் உயர்ந்து 26,073 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேவேளை, ஆசியன் பெயிண்ட், எச்டிஎஃப்சி வங்கி, கோடக் வங்கி, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments