Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
புதன், 25 செப்டம்பர் 2024 (10:02 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்றும் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் புதிய உச்சமாக நேற்று 84 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் இன்று 85 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்து 84 ஆயிரத்து 95 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 25 ஆயிரத்து 943 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், புதிய முதலீட்டாளர்கள் மிகவும் ஜாக்கிரதையாக முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஸ்டேட் வங்கி, ஆசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க. எம்.பி..!

தவெகவின் முதல் மாநாடு: நாளை கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை..!

குஷ்பு வகித்த பதவி விஜயதாரணிக்கு செல்கிறதா? தமிழக பாஜகவில் பரபரப்பு..!

பிக் பாஸ் செட் அமைக்கும் போது ஏற்பட்ட விபத்து: வடமாநில தொழிலாளி காயம்

1,111 ரூபாயில் விமானத்தில் பயணம் செய்யலாம்: இண்டிகோ சூப்பர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments