அதானி விவகாரத்தால் மீள முடியாமல் திணறும் பங்குச்சந்தை.. இன்றும் சரிவு..!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (09:57 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நன்றாக உயர்ந்து கொண்டு வந்த நிலையில் அதானி விவகாரம் காரணமாக படுவீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் பங்குச்சந்தை மீள முடியாமல் திணறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 390 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 20 புள்ளிகள் சரிந்து 17,740 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்னும் ஒரு சில நாட்களில் பங்குச் சந்தை மீண்டும் உயரும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments