Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

Siva
வியாழன், 20 பிப்ரவரி 2025 (10:27 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளது. நேற்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் உயர்ந்தாலும், முடிவில் மீண்டும் சரிவில் முடிந்தது. எனவே, இந்த மாதம் முழுவதும் முதலீட்டாளர்களுக்கு சோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன், மும்பை பங்குச்சந்தை 235 புள்ளிகள் உயர்ந்து 75,704 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 22,284 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார்ஸ், சிப்லா, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், இண்டஸ்‌இன்ட் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், டெக் மகேந்திரா, டைட்டான், விப்ரோ, சன் பார்மா, பிரிட்டானியா, டி.சி.எஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜி, கோடக் மகேந்திரா வங்கி, பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments