Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

Siva
வெள்ளி, 28 மார்ச் 2025 (10:45 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில், அதன் பின் சில நேர்மறை செய்திகள் வந்ததன் காரணமாக தற்போது ஏற்றத்தில் உள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்ந்து 77,678 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 23,674 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் கோடக் மகேந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், டாடா மோட்டார்ஸ்,  ரிலையன்ஸ், கோல் இந்தியா, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஆசியன் பெயிண்ட், டைட்டான், ஸ்டேட் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், எச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டி.சி.எஸ், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments