Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்ற இறக்கமின்றி மந்தமாக வர்த்தமாகும் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
வியாழன், 27 பிப்ரவரி 2025 (11:24 IST)
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக மிக அதிகமான சரிவில் இருந்த நிலையில், இன்று பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி மந்தமாக விற்பனையாகி வர்த்தகமாகி வருவதாக தகவல் அறியப்பட்டுள்ளது.
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று வெறும் 30 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 74,679 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிப்டி ஏழு புள்ளிகள் குறைந்து 22,525 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ் இன்ட் வங்கி, விப்ரோ, எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இன்போசிஸ், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஸ்டேட் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், டைட்டான், டெக் மகேந்திரா, ஆசியன் பெயிண்ட், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ், மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, ஹெச்.சி.எல் டெக்னாலஜி, அப்பல்லோ ஹாஸ்பிடல், டாடா மோட்டார்ஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்னும் சில நாட்களுக்கு பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் இன்றி மந்தமாகவே வர்த்தகமாகும் என்று கூறப்படுவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments