Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. லாபத்தை அதிகளவில் புக் செய்கிறார்களா?

Siva
வியாழன், 15 மே 2025 (10:02 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் உயர்ந்ததால், அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் உச்சத்தை அடைந்தது. இதனை அடுத்து, லாபத்தை புக் செய்ய முதலீட்டாளர்கள் தொடங்கியதால்,   நேற்று மற்றும் நேற்று முன்தினம் பங்குச்சந்தை சரிந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து, 80,923 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 119 புள்ளிகள் சரிந்து, 24,459 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில், பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
டைட்டான், டிசிஎஸ், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments