Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாரத்தின் முதல் நாளில் இன்று பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

share
, திங்கள், 31 ஜூலை 2023 (10:33 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சற்றுமுன் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரித்து 62250 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அந்த வகையில் தேசிய பங்கு சந்தையான நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 19,670 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆக்கி வருகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசகர் இடம்  ஆலோசனை பெற்று முதலீடு செய்யவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!