Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2015 (11:10 IST)
பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரித்தது. 


 

 
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது.
 
இந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தை அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பு பாதிக்காது என்ற அறிவிப்பு காரணமாக பங்கு சந்தை ஏற்றம் காணத் தொடங்கியது.
 
உலோகத் துறை பங்குகளை முதலீட்டு நிறுவனப் பங்குகளின் விலை 2.46 சதவீதம் உயர்ந்தது. அதிகபட்சமாக, டாடா ஸ்டீல் நிறுவனப் பங்கின் விலை 4.76 சதவீதம் அதிகரித்தது. 
 
தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தில், நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 7,844 புள்ளிகளாக நிலைத்தது.
 
மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரித்து 25,803 புள்ளிகளாக நிலைபெற்றது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments