2 நாள் ஏற்றத்திற்கு பின் சற்றே சரிந்த பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (11:04 IST)
இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் அடைந்தனர் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின்னர் தற்போது சற்றே பங்கு சந்தை இன்று சரிந்து உள்ளது. பங்குச்சந்தை மிக அதிக அளவு உயர்ந்துள்ளதால் லாபத்தை புக் செய்ய முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வருவதால் பங்கு சந்தை சற்று இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 45,400 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 19,373 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பங்குச்சந்தை இன்று சற்றே குறைந்து இருந்தாலும் நாளை மற்றும் நாளை மறுநாள் உயர்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments