Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது பங்குச் சந்தை

மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது பங்குச் சந்தை
, புதன், 3 செப்டம்பர் 2014 (13:07 IST)
நாட்டில் பங்குச் சந்தைகளில் முதலீடு குறித்த ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே புதிய உச்சத்தைத் தொட்ட பங்குச் சந்தை இன்றும் அதன் தாக்கத்தை எதிரொலித்தது.

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 129.51 புள்ளிகள் உயர்ந்து 27,148.90 புள்ளிகளாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.75 புள்ளிகள் அதிகரித்து 8,119.80 புள்ளிகளாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

மேலும் ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளான ஹாங்காங்கின் ஹாங் செங் 0.15%, ஜப்பான் நிக்கேய் 0.82% உயர்ந்து காணப்பட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.60.61 காசுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil