Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி பிரச்சனைக்கு பின் மீண்டும் ஏறுமுகத்தில் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (09:39 IST)
பிரபல தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்த நிலையில் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன என்பதை பார்த்தோம். 
 
இதனால் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதானி பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது மீண்டும் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 290 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 200 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 17,660 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதானி பிரச்சனையை அடுத்து மீண்டும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments