Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 நாளாக உயராத பெட்ரோல் & டீசல் விலை!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
கடந்த 17 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

 
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியும் வந்து கொண்டிருந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது என்பதும் இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த அதிருப்திக்கு உள்ளானார்கள் என்பதையும் பார்த்து வந்தோம்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தும் ஒரே விலையிலும் இருப்பதை அடுத்து, சென்னையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் உள்ளது.
 
கடந்த 15 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் 17வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நூத்தி ரூ.102.49 என்ற விலையில் டீசல் ஒரு லிட்டர் ரூ.94.39 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments