Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன?

Siva
வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (09:34 IST)
இந்திய பங்குச் சந்தை நேற்று, நேற்று முன்தினம் சரிந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் சரிந்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பெரிய அளவில் சரியாமல், மிகவும் குறைவான அளவுதான் சரிந்துள்ளதால், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குச் சந்தை உயர்வை எதிர்நோக்கி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச் சந்தை 40 புள்ளிகள் மட்டுமே சரிந்து, 78,017 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி வெறும் ஒரு புள்ளி மட்டும் சரிந்து, 23,063 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், பிரிட்டானியா, ஹீரோ மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதே நேரத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், டைட்டான், மாருதி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம் வைரல்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: ரயில்கள் தாமதம்..!

பெயர், லோகோவை மாற்றியது ஜொமாட்டோ நிறுவனம்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. திருச்சியில் 4 பேர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

இன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு.. தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments