நேற்று போலவே இன்றும் சரிந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

Siva
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (09:58 IST)
நேற்றைய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், இன்றும் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 352 புள்ளிகள் குறைந்து 80,658 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சுமார் 100 புள்ளிகள் சரிந்து 24,050 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில், இன்றைய பங்குச்சந்தையின் முடிவில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்ததாகவும், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments