Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று போலவே இன்றும் சரிந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

Siva
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (09:58 IST)
நேற்றைய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், இன்றும் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 352 புள்ளிகள் குறைந்து 80,658 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சுமார் 100 புள்ளிகள் சரிந்து 24,050 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில், இன்றைய பங்குச்சந்தையின் முடிவில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்ததாகவும், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments