Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று போலவே இன்றும் பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Siva
புதன், 16 அக்டோபர் 2024 (09:37 IST)
இந்திய பங்குச் சந்தை நேற்று ஆரம்பத்தில் ஏற்றத்தில் இருந்தாலும், அதன் பிறகு திடீரென பங்குச் சந்தை சரிந்தது என்பதும், பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதியில் சுமார் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று போலவே இன்றும் பங்குச் சந்தை சரிவுடன் ஆரம்பித்துள்ளது. சற்று முன் மும்பை பங்குச் சந்தை 70 புள்ளிகள் குறைந்து 81, 730 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்கு சந்தை 12 புள்ளிகள் குறைந்து 25,040 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

பங்குச் சந்தை மிகவும் குறைவான சரிவில் இருப்பதால், மதியத்திற்கு மேல் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் ஆலோசனை பெற்றுக்கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வாங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று போலவே இன்றும் பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அரிய வால் நட்சத்திரம்? இந்தியாவில் எங்கெல்லாம் தெரியும்?

பயணிகள் குறைவாக இருந்தாலும் வழக்கம்போல் மெட்ரோ ரயில் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு..!

தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகளை நடும் நிகழ்ச்சியினை வனத்துறை அமைச்சர் பொன்முடி பனை விதை மற்றும் பணங்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.....

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு....

அடுத்த கட்டுரையில்
Show comments