Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

Mahendran
திங்கள், 28 ஜூலை 2025 (17:18 IST)
மும்பை பங்குச்சந்தை இன்று எதிர்மறையாக தொடங்கிய  சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் மூன்றாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கோடக் மஹிந்திரா வங்கியில் ஏற்பட்ட கடும் விற்பனையும், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மையும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
 
இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 572.07 புள்ளிகள் சரிந்து 80,891.02 ஆகவும், நிஃப்டி 156.10 புள்ளிகள் சரிந்து 24,680.90 ஆகவும் நிலைபெற்றன. ஜூன் 13-க்குப் பிறகு நிஃப்டி 24,700 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது இதுவே முதல்முறை. பார்மா துறை தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்தன. ரியாலிட்டி குறியீடு 4%, மீடியா குறியீடு 3%, மற்றும் மூலதனப் பொருட்கள், உலோகம், தொலைத்தொடர்பு, வங்கி குறியீடுகள் 1% முதல் 1.5% வரை சரிந்தன.
 
கோடக் மஹிந்திரா வங்கி (7.31%), விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், டிசிஎஸ் (பணியாளர்கள் குறைப்பு அறிவிப்பால்) போன்ற பங்குகள் சரிந்தன. இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற பங்குகள் உயர்ந்தன. 100-க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments