டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

Mahendran
புதன், 7 மே 2025 (18:46 IST)
பாகிஸ்தான் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலையடுத்து, இன்று  இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக வீழ்ந்தது.
 
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ராணுவ நடவடிக்கைகள், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குள் நடந்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டம் அதிகரித்துள்ளது.
 
இதன் தாக்கம் அந்நிய செலாவணி சந்தையிலும் தெரிந்தது. வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனையில் இந்திய ரூபாய் இன்று 84.65 என்ற அளவில் தொடங்கியது. வர்த்தகத்தின் போது 84.47 என்ற உயரத்தையும், 84.93 என்ற தாழ்வையும் தொடந்தது. இறுதியில், 45 காசுகள் வீழ்ச்சியுடன் ரூ.84.80 என்ற நிலையில் முடிந்தது.
 
நேற்று  இந்திய ரூபாய் 5 காசுகள் குறைந்து ரூ.84.35 ஆக இருந்தது. ஆனால் இன்று ஏற்பட்ட இழப்பு அதிகமாக உள்ளது என்று நாணய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலை தொடர்ந்தால் இறக்குமதி செலவுகள் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments