Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

Mahendran
புதன், 7 மே 2025 (18:46 IST)
பாகிஸ்தான் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலையடுத்து, இன்று  இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக வீழ்ந்தது.
 
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ராணுவ நடவடிக்கைகள், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குள் நடந்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டம் அதிகரித்துள்ளது.
 
இதன் தாக்கம் அந்நிய செலாவணி சந்தையிலும் தெரிந்தது. வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனையில் இந்திய ரூபாய் இன்று 84.65 என்ற அளவில் தொடங்கியது. வர்த்தகத்தின் போது 84.47 என்ற உயரத்தையும், 84.93 என்ற தாழ்வையும் தொடந்தது. இறுதியில், 45 காசுகள் வீழ்ச்சியுடன் ரூ.84.80 என்ற நிலையில் முடிந்தது.
 
நேற்று  இந்திய ரூபாய் 5 காசுகள் குறைந்து ரூ.84.35 ஆக இருந்தது. ஆனால் இன்று ஏற்பட்ட இழப்பு அதிகமாக உள்ளது என்று நாணய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலை தொடர்ந்தால் இறக்குமதி செலவுகள் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு - காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை.. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்?

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!

9 பேருந்து நிறுத்தங்கள்.. சைக்கிள் பாதைகள்.. புத்துயிர் பெறுகிறது மெரினா. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.2000.. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கிடுகிடு உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments