Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

Mahendran
புதன், 7 மே 2025 (18:46 IST)
பாகிஸ்தான் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலையடுத்து, இன்று  இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக வீழ்ந்தது.
 
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ராணுவ நடவடிக்கைகள், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குள் நடந்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதட்டம் அதிகரித்துள்ளது.
 
இதன் தாக்கம் அந்நிய செலாவணி சந்தையிலும் தெரிந்தது. வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனையில் இந்திய ரூபாய் இன்று 84.65 என்ற அளவில் தொடங்கியது. வர்த்தகத்தின் போது 84.47 என்ற உயரத்தையும், 84.93 என்ற தாழ்வையும் தொடந்தது. இறுதியில், 45 காசுகள் வீழ்ச்சியுடன் ரூ.84.80 என்ற நிலையில் முடிந்தது.
 
நேற்று  இந்திய ரூபாய் 5 காசுகள் குறைந்து ரூ.84.35 ஆக இருந்தது. ஆனால் இன்று ஏற்பட்ட இழப்பு அதிகமாக உள்ளது என்று நாணய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலை தொடர்ந்தால் இறக்குமதி செலவுகள் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

ஆபரேசன் சிந்தூர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments