Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகள் 4வது நாளாக இன்று ஏற்றத்துடன் முடிவு

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2015 (18:23 IST)
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக ஏற்றத்துடன் இன்று மாலை முடிவடைந்துள்ளன. 


 

 
தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 7,844ல் வர்த்தகம் முடிவடைந்தது. மும்பை சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரித்து 25,804ல் வர்த்தகம் இன்று மாலை முடிந்துள்ளது.

2006ஆம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப்படாமல் இருந்த வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) அதிகரித்து பெடரல் வங்கி உத்தரவிட்டுள்ளது.
 
10 ஆண்டுக்கு பின் பூஜ்ஜியத்தில் இருந்து வட்டி விகிதம் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட அமெரி்க்க வட்டி விகித உயர்வு குறைவு என்பதால் சந்தையில் ஏற்றம் அடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளில் ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளின் விலை உயர்ந்துள்ளன. மேலும், டாடா ஸ்டீல், ஹண்டால்கோ, உள்ளிட்ட நிறுவன பங்கு விலையும் இன்றைய பங்குச் சந்தையில் ஏற்றம் அடைந்துள்ளன.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments