ஒரே நாளில் ரூ. 536 விலை குறைந்த தங்கம் – மக்கள் நிம்மதி பெருமூச்சு!

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (12:07 IST)
நேற்று ஒரே நாளில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் இன்று சடாரென விலை சரிந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றமும் இறக்கமுமாய் ஆட்டம் காட்டி வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையாலும், பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதாலும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.     

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ரூ.30,000-த்திற்குள் இருந்த நிலையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.538 உயர்ந்து ரூ.31,432க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் விலை ஏறியது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 536 ரூபாய் விலைகுறைந்து 30,640 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருந்த மக்கள் விலை குறைந்துள்ளதால் நிம்மதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களிடம் தவறாக நடப்பது புனித பயணத்திற்கு சமம்.. சர்ச்சை பேச்சு பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

இண்டர்நெட் கூட இல்லை.. உயிருக்கு பயந்து வந்துட்டோம்.. ஈரானில் இருந்த வந்த இந்தியர்கள் பேட்டி..

தவெகவில் இணைந்த அதிமுக பிரபலம்.. இன்னும் யாரெல்லாம் வருவார்கள்?

எம்ஜிஆர் பிறந்த நாளில் விஜய் போட்ட எக்ஸ் பதிவு.. அதிமுக வாக்குகளை கவர திட்டமா?

கிரீன்லாந்து டென்மார்க்குக்கே சொந்தம்!.. ரஷ்ய அதிபர் அதிரடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments