ஒரு சவரன் ரூ.60,000: எஸ்டிமேட் போடும் வியாபாரிகள்!!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:38 IST)
2022-ல் ஒரு சவரன் 60,000 ரூபாயை தாண்டும் என தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். 
 
கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.    
 
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து இன்று சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து 39,352‬ ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 29 ரூபாய் குறைந்து 4919 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 
 
கடந்த 19 நாட்களில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.4,008 வரை குறைந்துள்ளது. அதேபோல வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.69.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடயே விலை ஏற்ற, இறக்கங்கள் தற்காலிகமானதே எனக் கூறும் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர், 2022-ல் ஒரு சவரன் 60,000 ரூபாயை தாண்டும் என்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments