Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ ஏர் நிறுவனம் 72 ஏர்பஸ் விமானங்களை வாங்க முடிவு

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (11:25 IST)
இந்திய விமான நிறுவனங்களில் ஒன்றான கோ-ஏர் மேலும் 72 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


 


நாட்டின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்று கோ-ஏர் நிறுவனம். இந்திய சந்தையில் பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கை உயர்விற்கு ஏற்ப தனது சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் தனது வர்த்தகச் சேவையை விரிவாக்கம் செய்ய விரும்பும் கோஏர் தன்னை ஆயத்தம் செய்யும் வகையில் புதிதாக 72 ஏர்பஸ் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.

ஃபார்ன்பரோ (Farnborough) இண்டர்நேஷ்னல் விமானக் கண்காட்சியில் கோஏர் விமான நிறுவனம் 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான 72 ஏர்பஸ் ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் கூடுதலான தள்ளுபடிகளைக் கோஏர் பெறும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது. காரணம் ஏர்பஸ் நிறுவனம் இந்த ஆர்டரை பல்க் ஆர்டராகப் பார்க்கிறது.

இது நாள் வரை கோ-ஏர் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 144 விமானங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments