Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
, திங்கள், 1 ஏப்ரல் 2013 (17:30 IST)
இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 28.98 புள்ளிகள் உயர்ந்து 18865 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 21.85 புள்ளிகள் உயர்ந்து 5704 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில் டாக்டர் ரெட்டி நிறுவனம், பிஹெச்இஎல், எல்&டி, இன்போசிஸ் மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபத்துடனும், ஸ்டெர்லைட் இந்தியா, ஜிண்டால் ஸ்டீல் பிளாண்ட், டாடா மோட்டார்ஸ், விப்ரோ மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக நஷ்டத்துடனும் நிறைவடைந்தன.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டதாலும், உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீது தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட்டுக்கு பாதகமான தீர்ப்பு வரும் என்ற கருத்து நிலவுவதாலும் இன்றைய பங்குச்சந்தையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

Share this Story:

Follow Webdunia tamil