Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்வு
, திங்கள், 21 பிப்ரவரி 2011 (16:44 IST)
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்ந்து 18,438 புள்ளிகளில் முடிவடைந்தது.

கடந்த வெள்ளியன்று 295 புள்ளிகள் சரிந்து முடிந்த சென்செக்ஸ் இன்று காலைத் துவக்கத்தில் 95 புள்ளிகள் அதிகரித்தது. தொடர்ந்து உயர்வு நிலை நீடித்தது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 5,518 புள்ளிகளில் முடிவடைந்தது.

டிசிஎஸ், விப்ரோ, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

டாடா மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா, மாருதி சுஸுகி, என்டிபிசி, டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil