Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓமப்பொடி செய்ய தெரிந்து கொள்ளோம்...

Webdunia
தேவையான பொருள்கள்:
 
கடலை மாவு - 1 கப் 
பச்சரிசி  மாவு - 1/2 கப்
பெருங்காயம் - சிறிதளவு 
ஓமம் - 1 மேஜைக்கரண்டி 
வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு

 
 
செய்முறை:
 
ஓமம் 1 மேஜை கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து,  நீரை வடி கட்டி தனியே வைக்கவும். ஊறிய ஓமத்தை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் ஓமத்தண்ணீருடன் கரைத்து வடி கட்டிக்கொள்ளவும்.
 
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் ஓமத் தண்ணீரை சேர்த்து பிசையவும். பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முறுக்கு  குழலில் ஓமப்பொடி அச்சை போட்டு குழல் கொள்ளும் அளவுக்கு மாவை வைத்து பிழியவும்.
 
ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மீதமுள்ள எல்லா  மாவையும் இதே முறையில் பிழிந்து எடுக்கவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments