கொத்துமல்லி, கறிவேப்பிலை வாடாமல் இருக்க...
பழைய பால்குக்கரில் பக்கவாட்டில் தண்ணீர் ஊற்றி அதில் பச்சைமிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வைத்தால் இரண்டு மூன்று நாட்களுக்குப் பசுமையாக இருக்கும்.
சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க...
மிக்ஸர், ஸ்வீட்டுகள், சர்க்கரை இவற்றில் எறும்பு வராதிருக்க, பில்லைக் கற்பூரம் (10 அடங்கிய) பாக்கெட் ஒன்றைப் போடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது...
மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது, ஒரு தக்காளி, கொஞ்சம் கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டிலேயே பாசந்தி செய்ய...
வீட்டிலேயே பாசந்தி செய்வதற்கு, தினமும் கொஞ்சம் பால் ஏடு வீதம் எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டே வர வேண்டும். ஒரு நாள் பாலை சுண்டக்காய்ச்சி ஏலப்பொடி, குங்குமப்பூ, சாரப்பருப்பு இவற்றைப் போட்டால் பாசந்தி மணக்கும் சுவைக்கும்.
பூரி உப்பலாக இருக்க...
பூரி இடும்போது மெல்லிசாய் இடாதீர்கள். அப்படிச் செய்தால் பூரி உப்பிக் கொண்டு வர வாய்ப்பே இல்லை. தடிமனான பூரிகள் மட்டுமே நன்கு உப்பும்.