2 அடி மணமகனுக்கும், பெண்ணுக்கும் திருமணம்
, வியாழன், 2 ஏப்ரல் 2009 (13:29 IST)
ரஜினிகாந்த் நடித்த, நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் என்ற பாடலில்... மொதலில் யோசிக்கணும் பிறகு நேசிக்கணும் மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு.. என்ற பாடலுக்கு ஏற்றபடி, 2 அடி உயரமே கொண்ட மணமகனுக்கும், சராசரியான உயரம் கொண்ட மணப் பெண்ணுக்கும் கேரளாவில் காதல் திருமணம் நடந்தது.கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்த ஓவியர் தேவதாஸ். 35 வயதான இவரது உயரம் 2 அடிதான். இவரது திருமண கனவு பல ஆண்டுகளாக நிறைவேறவில்லை.
இந்த நிலையில் சசிகலா(30) என்ற 5 அடி உயர பெண்ணை அண்மையில் சந்தித்தார். இருவரிடையேயும் காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இவர்களது திருமணத்தில் சசிகலாவின் பெற்றோருக்கு துளியும் விருப்பம் இல்லை.
இந்த நிலையில் தேவதாசும், சசிகலாவும் நேற்று காலை கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள பிரபல கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு தேவதாசின் பெற்றோர் மட்டுமே வந்திருந்தனர்.