இந்த நிலை நாடு முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள முன்னணி மகப்பேறு மையத்துக்கு மரபணு சோதனைக்காக வந்தவர்கள் எண்ணிக்கை இந்த ஓராண்டில் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை கைரேகை அறிவியல் மைய விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
சீனாவில் உள்ள மரபணு சோதனை மைய ஊழியர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டால், அவர் முகத்தை சுழித்தபடி நம்மிடம் சொல்கிறார், இங்கு சோதனை செய்ய வரும் ஜோடிகளில் பலர் திருமணம் ஆகாதவர்கள். மணமாகும் முன்பே காதலி மீது சந்தேகப்பட்டு குழந்தைக்கு அப்பா யார் என அறிய வருகின்றனர். கடந்த ஆண்டில் 3,000 சோதனைகள் நடந்தன. இது முன்பைவிட 20 சதவீதம் அதிகம். இங்கு வரும் ஆண்களிடம் பேசியதில், பெரும்பாலானவர்கள் தங்கள் மனைவிக்கு வேறு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பது தெரிய வந்தது. நெருப்பில்லாமல் புகையாது என்பது போல பல சந்தேகங்கள் மரபணு முடிவால் ஊர்ஜிதமாகியுள்ளது என்றார்.
ஒரு தந்தை, தனது மனைவிக்குப் பிறந்த/பிறக்கும் குழந்தை தன்னுடையது அல்ல என்று தெரிந்தால் அவரது நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்று சமூக நல ஆர்வலரிடம் கேட்டதற்கு, மரபணு சோதனையில் தனது குழந்தைக்கு அப்பா வேறு ஒருவர் என்று தெரிந்தால், அந்த ஆண், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுகிறான் அல்லது கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கிறார்கள் என்று கூறினார்.
இந்த அதிர்ச்சிகளுக்கெல்லாம் ஒரு கிரிடம் வைத்தது போல மற்றொருத் தகவலைக் கூறுகிறார் ஒரு முன்னணி மரபணு சோதனை மையத்தின் பொறுப்பாளர், அதாவது மரபணு சோதனைக்காக ஆண்கள் மட்டும் தங்களது மனைவிகளை அழைத்து வருவதில்லை. சில பெண்களும் தாங்களாகவே விரும்பி வருகிறார்கள். ஏன் என்றால், தங்களது வயிற்றில் யாருடைய வாரிசு வளர்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வருவதாக அவர்கள் கூறுகிறார்கள் என்று நமக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாரேப் பார்க்கலாம்.