திருமணத்தைப் பற்றி கிருபானந்த வாரியார் கூறியுள்ள கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளோம்.
அவற்றை சம்பிரதாயமாகவோ, பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவோ கருதாமல் அதில் இருக்கும் யதார்த்தத்தைப் பாருங்கள்.
மணமகனது குலம், கல்வி, சொத்து, அழகு என அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் பெண் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பெண்ணை யாருக்கு கொடுத்தீர்கள் என்று கேட்டால், அதை ஏன் கேட்கிறீர்கள் என்று கண்ணீர் விட வேண்டியது இருக்கும்.
படர்ந்த கொடி தனியே இருந்தால் ஆபத்து, உறுதி வாய்ந்த கம்பை பிடித்தே இருக்க வேண்டும். அதுபோல, பெண்களும் தனியே இருக்கக் கூடாது. கணவன் துணையுடன்தான் இருக்க வேண்டும். (விதிவிலக்குகளும் உண்டு)
கணவனும், மனைவியும் அன்புடன் வாழ வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன்பு பெண் பார்ப்பவர்கள் சில விஷயங்களை கவனித்தே ஆக வேண்டும்.
மணமகளானவள் மணமகனைவிட உயரத்தில் குறைவாகவும், தேக பருமனில் குறைவாகவும், வயதில், படிப்பு, செல்வம் ஆகியவற்றிலும் குறைந்த பெண்ணாகவும் இருக்க வேண்டும்.
அந்த காலத்தில் பெண் கேட்க அறிவுடைய பெரியோர்கள் வருவார்கள். இப்போதெல்லாம் தரகர்கள்தான் வருகிறார்கள். இது காலத்தின் கோலம். அதனால்தான் பல சிக்கல்கள் ஏற்பட்டு திருமண வாழ்க்கை அவதிப்படுகிறது.