Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் நோய் தொற்றிக் கொண்டதா?

Webdunia
புதன், 22 ஜூலை 2009 (18:06 IST)
இது காதல்தானா? நாம் காதல் வயப்பட்டுள்ளோமா? காதலுக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

எப்படியும் நம் காதல் உணர்வை முதலில் நண்பர்களிடம் கூறியிருப்போம். ஆனால் ஒரு சில நண்பர்கள் நம்மைக் குழப்பி குட்டையில் தள்ளியிருப்பார்கள். ஏன் என்று கெட்டால் குட்டையைக் குழம்பினால்தான் மீன் பிடிக்க முடியும் என்று காரணம் வேறு கூறுவார்கள்.

இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று நினைப்பவரா நீங்கள்?

முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர்கள் என்பதை எப்படி உறுதி செய்வது என்பது உங்களது கேள்வி?

ஒருவரைப் பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். அவரது பேச்சும், பழக்கமும் சந்தோஷம் தருகின்றன என்றாலும் இப்போதே இதனை காதல் என்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களா?

உங்களுக்கு ஒரு அறிகுறிகள் இருக்கும். அவற்றை இங்கே பரிசோதித்துக் கொள்ளுங்கள்

சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டுதல்

படுத்தவுடன் தூக்கம் வராமல் இருப்பது

நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் குறைவது

கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவழிப்பது

சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டாமை

விரும்புபவரை பார்க்க நேர்ந்தல் இதயம் அதிகப்படியாக துடிப்பது

உடை உடுத்துவதில் அதிக அக்கறை எடுப்பது

webdunia photoWD
தனிமையை அதிகம் விரும்புவது

யாராவது காதலித்தால், அவர்களைப் பற்றியும், அவர்கள் காதலை சொன்ன விதத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது

இசையை மிகவும் ரசிப்பது, நள்ளிரவில் தூக்கத்தை விட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது

நகம் கடிப்பது போன்ற புதிய பழக்க வழக்கங்கள் வருவது

நாம் விரும்புபவரின் நட்பு வட்டாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பது

காதல் திரைப்படங்கள் மற்றும் காதல் இசைப் பாடல்களை மீது அதிக விருப்பம்

எதையும் ரசிக்கும் தன்மை அதிகரிக்கும்.

நீங்கள் விரும்பி வாங்கிய புத்தகத்தைக் கூட படிக்க முடியாமல் ஒரு திணறல் ஏற்படுவது

பொது விழாவில் கலந்து கொள்வது, அதிகமாக வெளியே செல்ல விரும்புவது

இந்த அறிகுறிகளில் பாதியாவது தற்போதுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அது காதல்தான்.

காதல் மனதுக்குள் பூத்துவிட்டால் ஏதோவொரு சந்தோஷம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும்.

ஆனால் காதலைப் பற்றிய ஒரு பழமொழியை இங்கே நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.

காதல் சந்தோஷத்தைத் தரும். ஆனால் சந்தோஷமாக இருக்க விடாது.

சரி அடுத்த கட்டுரையில் சந்திக்கலாம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments