Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் பதவி விலக வேண்டும் ? – நடிகை கஸ்தூரி ட்வீட் !

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (14:23 IST)
தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவாரா என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியாக பொறுப்பேற்பதற்கு குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. காங்கிரஸின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கஸ்தூரி டிவிட்டரில் ‘காங்கிரஸின் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் பதவி விலகியுள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய நேர்மை மற்றும் சுய மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி இப்போது என்ன செய்யப்போகிறார். காங்கிரஸின் இன்னும் பல மாநிலத் தலைவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments