Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக - திமுக கூட்டணியினர் பிரசாரம் செய்ய தடை - ஆட்சியர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:26 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கரூரில் பேருந்து நிலையம் அருகே அதிமுக - காங்கிரஸ் கட்சியினர்  இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்சிகளுக்கும் பரப்புரை செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
மக்களைவைத் தேர்தலையொட்டி இன்று பிரசாரம் செய்ய இறுதிநாள் ஆகையால் அதிமுக - திமுக கூட்டணி கட்சிகள் தமிழக மெங்கும் தீவிரமாக வ்சாக்கு சேகரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கருர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணிக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். அப்போது அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
காரூரில் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பரப்புரையின் போது அதிமுக - திமுக கூட்டணியினர் இடையே மோதல் நடைபெற்றது.
 
மோதலை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பரப்புரை செய்ய தடைவிதிக்கப்பட்டது.
 
பரப்புரை செய்ய ஒரே இடத்தில் அனுமதி கேட்டதால் அதிமுக - திமுக கூட்டணிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தற்போது அதிமுக - காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கரூரில் பிரசாரம் செய்ய தடைவிதித்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
 
அதிமுக - காங்கிரஸ் ஆகிய இருகட்சியினர் இடையே மோதல் போக்கு ஏற்படாமல் இருக்கவே ஆட்சியர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments