Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் பிரதமருக்கு வேட்டு வைக்க வேண்டும்..! உதயநிதி ஸ்டாலின்..!!

Senthil Velan
திங்கள், 8 ஏப்ரல் 2024 (15:27 IST)
மக்களவை தேர்தலில் பிரதமருக்கு வேட்டு வைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தர்மபுரி தொகுதியில் ஆ.மணி வெற்றி பெறுவது உறுதி என்பதை, உங்கள் எழுச்சியை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.
 
வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் நாம் பிரதமருக்கு வேட்டு வைக்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர் உதயநிதி, அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை, சுயமரியாதை என்ன என்பதை தெரிந்து கொள்வார் என்று கடுமையாக சாடினார்.
 
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கேட்டால், பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பதில் தருகிறார் என்று விமர்சித்தார். 

ALSO READ: நாளை பிரதமர் வருகை.! சென்னையில் போக்குவரத்து மாற்றம்..! டிரோன்கள் பறக்க தடை..!!
 
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, மாநில உரிமைகள் அனைத்தையும் அடகு வைத்த அ.தி.மு.கவிற்கும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவிற்கும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments