Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல்..! பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

Senthil Velan
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (18:26 IST)
வாழ்நாள் முழுக்க நீதிமன்றத்திற்கு அலைய வைத்து விடுவேன் என மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
பல்வேறு இடங்களில் வேட்பாளர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 
 
அப்பொழுது அங்கு வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தின் காரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  வாழ்நாள் முழுக்க நீதிமன்றத்துக்கு அலைய வச்சு விடுவேன்' என முருகானந்தம் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா..? தமிழகம் முழுவதும் ஐ.டி ரெய்டு..!!
 
இந்த நிலையில் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தின் மீது தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்தனர். அதன் பேரில் குன்னத்தூர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments