4 தொகுதிகளில் நாதக இன்று வேட்பு மனுதாக்கல்..! எந்தெந்த தொகுதிகள்..?

Senthil Velan
புதன், 20 மார்ச் 2024 (08:17 IST)
மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் நான்கு தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 
 
வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.
 
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து ஐந்து பேருக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் விதித்துள்ளனர்.

ALSO READ: நெருங்கும் ஐபிஎல் திருவிழா.! சென்னை வந்தடைந்த ஆர்.சி.பி வீரர்கள்..!!
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் நான்கு தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, அரக்கோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments