Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப் பொருள் கடத்தவே திமுகவில் அயலக அணி..! இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு..!!

Senthil Velan
புதன், 27 மார்ச் 2024 (18:29 IST)
போதை பொருள் கடத்துவதற்காகவே அயலக அணியை திமுக உருவாக்கி உள்ளதாக  எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வெளிநாட்டிற்கு போதை பொருள் கடத்தியதாக திமுக அயலக அணியின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜாபர் சாதிக்கிடமிருந்து 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் என்று எடப்பாடி குறிப்பிட்டார். 

எந்த கட்சியிலும் அயலக அணி இல்லை என்றும் திமுகவில் மட்டுமே உள்ளது என்றும் போதை பொருள் கடத்துவதற்காகவே அந்த அணியை உருவாக்கி உள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார். 


திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவரை புகார் அளிக்கும் வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments