Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு..! சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்..!!

Senthil Velan
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (18:15 IST)
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இருப்பினும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் ஒரு சில இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டமும் நடைபெற்றது. குறிப்பாக சென்னையில் மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.

மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் டோக்கன் பெற்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.  அரசியல் கட்சியினர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 

ALSO READ: இயந்திரத்தில் கோளாறு.? தர்ணா போராட்டம்..! நா.த.க வேட்பாளர் கைது..!
 
தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகளின் முழு விவரங்களை தேர்தல் அதிகாரிகள் இன்று இரவுக்குள் அறிவிப்பார்கள் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments