Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனல் பறக்கும் தேர்தல்.! அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

Senthil Velan
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (13:08 IST)
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம்  அனுப்பியுள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.  வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
வாக்குச்சாவடிகளில் 15 க்கு15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம்.! காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி..!!
 
வாக்குச்சாவடிகளில் உதவி மையம், குடிநீர், கழிவறை, சாய்வு தளம், மின் இணைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் குழந்தைகளுடன் வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சத்யபிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

5 மணி நேரமாக குளத்தில் மிதந்த பிணம்..? தொட்டவுடன் உயிர்வந்த ஆச்சர்யம்! – ஆந்திராவை அதிரவைத்த குடிமகன்!

வந்தே பாரத்துக்கும் வந்துட்டாங்களா..? வித் அவுட் டிக்கெட் கும்பலால் தடுமாறிய பயணிகள்! – வைரலாகும் வீடியோ!

Viral Video: என்ன திமிரு இருந்தா Toll Fee கேப்ப! சுங்கச்சாவடியை புல்டோசரால் இடித்து தள்ளிய டிரைவர்!

முடிகிறது ஜேபி நட்டாவின் பதவிக்காலம்.. அடுத்த பாஜக தலைவர் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments