விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரம்..! அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

Senthil Velan
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (13:30 IST)
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை ஒட்டி தமிழக முழுவதும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு 10:40 மணிக்கு பிரச்சாரம் செய்வதற்காக அண்ணாமலை தாமதமாக வந்தார். 
 
இதைத்தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அண்ணாமலையை பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என்று போலீஸாரிடம் புகார் அளித்தனர். உடனடியாக அண்ணாமலை அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது பாஜக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

ALSO READ: லிப்டில் பெண்ணிடம் அத்துமீறல்..! ஆடிட்டர் அடித்துக் கொலை..!

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் இருவர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments