Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை..!!

Senthil Velan
செவ்வாய், 19 மார்ச் 2024 (12:25 IST)
மக்களவை தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை காணொளி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வலுவான கூட்டணியாக திமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. அடுத்த கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில்திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்  நாளை நண்பகல் 12 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: பிரதமர் மோடி வருகை எதிரொலி.! சென்னை - சேலம் விமான சேவை ரத்து..!!
 
மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் திமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் பரப்புரை, தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திமுகவின் மூன்றாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிப்பது போன்றவற்றை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments