Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை..!!

Senthil Velan
செவ்வாய், 19 மார்ச் 2024 (12:25 IST)
மக்களவை தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை காணொளி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வலுவான கூட்டணியாக திமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. அடுத்த கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில்திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்  நாளை நண்பகல் 12 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: பிரதமர் மோடி வருகை எதிரொலி.! சென்னை - சேலம் விமான சேவை ரத்து..!!
 
மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் திமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் பரப்புரை, தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திமுகவின் மூன்றாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிப்பது போன்றவற்றை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments