Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல்.! காங்கிரசை கடுமையாக சாடிய ஜே.பி.நட்டா..!

Senthil Velan
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (17:36 IST)
காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
 
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடினார். முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது என்றும் அனைவரிடம் இருந்தும் வாக்குகளை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில சாதி, சமுதாயம் அல்லது பிரிவுகளுக்காக மட்டும் அரசாங்கத்தை அமைத்தது என்றும் ஜெபி நட்டா குற்றம் சாட்டினார்.
 
காங்கிரஸ் கட்சி அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருக்கவில்லை என்று அவர் கூறினார். ஆனால், தற்போது பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலின் வரையறையை மாற்றிவிட்டார் என்று அவர் தெரிவித்தார். 

ALSO READ: முதல்வர் குடும்பத்துடன் ஜாபர் சாதிக் நேரடி தொடர்பு... நிர்மலா சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தற்போது மக்களை தவறாக வழிநடத்தி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது என்றும் சாதி மற்றும் வகுப்புவாத அரசியலை இனி செய்ய முடியாது என ஜே.பி.நட்டா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடிக்கும் குண்டுகள் நடுவே லெஸ்ஸி கொடுத்த சிறுவன்! ஆபரேஷன் சிந்தூரில் ஆச்சர்யம்! - ராணுவம் கொடுத்த பரிசு!

வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. புயலாக மாறுமா?

அடுத்த 5 ஆண்டுகளில் உச்சம் தொடும் வெப்பநிலை.. ஆர்க்டிக் உருகும்.. கடல் உயரும்! - உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!

பத்திரப்பதிவுக்கு ‘ஆதார்’ தேவையில்லை! ஆனால்..? - மத்திய அரசின் புதிய பத்திரப்பதிவு மசோதா!

3வது நாளாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.70,000க்கும் கீழ் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments