Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக காங்கிரஸ் இடையே நாளை மறுநாள் பேச்சுவார்த்தை..! ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு..!

Senthil Velan
வெள்ளி, 8 மார்ச் 2024 (14:22 IST)
திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நாளை மறுநாள் நடைபெறுகிறது.
 
மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் அந்தந்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதன் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறது. இதுவரை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம், சிபிஐ, கொங்கு தேசிய மக்கள் கட்சி ஆகியவைகளில் தங்கள் தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சிபிஎம், சிபிஐக்கு தலா 2 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் விசிகவுக்கு இன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. கூடுதல் தொகுதிகளை கேட்டதால் காங்கிரஸ் திமுக இடையே இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியானது. 

ALSO READ: கேட்டது 3.. கொடுத்தது 2.. திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து..!!

இந்நிலையில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த பேச்சு வார்த்தையின் போது திமுக காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments