Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட்டு, போட்டோ போட்டா ரூ.7,000 பரிசு!! தேர்தல் ஆணையத்தின் ஆஃபர்!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:52 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஓட்டு போட்டு, செல்பி எடுத்து அதை குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் நம்பருக்கு அனுப்பினால் ரூ.7,000 பரிசு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
மிசோசம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. இங்கு நாளை மறுதினம் வாக்குபதிவு நடைபெற்வுள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 7,84,405 வாக்காளர்கள் உள்ளனர். 4,20,408 பெண் வாக்காளர்களும், 81,991 ஆண் வாக்காளர்களும், முதல் முறை வாக்காளர்கள் 52,556 பேர் உள்ளனர். 
 
எனவே, முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் புது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. முதல் முறை வாக்காளர்கள், ஓட்டு போட்டதும் ஓட்டு போட்டதற்கான அடையாள மையுடன் செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7,000 பரிசு வழங்கப்படுமாம். 
 
அதாவது, அழகாக செல்பி எடுத்து அனுபுவோரில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ.7,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments